• June 8, 2025

கோவில்பட்டியில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வு கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

 கோவில்பட்டியில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வு கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

கோவில்பட்டி நகரில் சில பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. இதனால் இரண்டு நாட்கள் மற்றும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர. இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது போல் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள சில பஞ்சாயத்துகளில் குடிநீர் ததட்டுப்பாடு நிலவுகிறது.

இதை தொடர்ந்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குடிநீர் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் /உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் எம்எல்ஏ..கலந்துகொண்டு பேசினார்

. மாவட்ட துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் .கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *