• June 7, 2025

Month: June 2023

கோவில்பட்டி

மாணவ, மாணவி களுக்கான கோடைகால ஆக்கி பயிற்சி முகாம்

ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக மாணவர்களுக்கான கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றதுஇந்த பயிற்சியில் 35 வீரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். பயிற்சியின் போது தினமும் காலையும் மாலையும் முட்டை,பால் வழங்கப்பட்டதுபயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று மாலை வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், உதவி தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி; டாக்டர்கள் நடந்து சென்றனர்

கோவில்பட்டியில் இந்திய மருத்துவர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், ஜே.சி.ஐ. ஆகியவை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை நடத்தப்பட்டது. மாலை 4 மணி அளவில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நகரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் வரத்தொடங்கினார். மேலும் பயிற்சி டாக்டர்கள், நர்ஸ்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஜே. சி. ஐ. உறுப்பினர்கள் குவிந்தனர். பேரணிக்கு இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை செயலாளர் டாக்டர் சிவ […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம்

கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச்சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில் இன்று (11-6-2023) 154வது இலவச கண்சிகிச்சை  முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புத்துயிர் ரத்ததானக் கழகச்செயலாளர் க.தமிழரசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு காமராஜர் பேரவைத் தலைவர் நாஞ்சில் குமார் தொடங்கி வைத்தார். முகாமில் கலந்துகொண்ட 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்விழிப் பரிசோதகர் ஜோதி கண்பரிசோதனை செய்தார். 20 பேர் […]

கோவில்பட்டி

கோவில் விழாவில் அன்னதானம்

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள கணேஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள சீமான் அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் 38வது திருக்காட்சி திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அய்யா நாராயணசாமி வாகன பவனி, மற்றும் சந்தனகுடம் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருவிழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம். எல். ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய […]

கோவில்பட்டி

கரிசல்குளம், துறையூர் கிராமங்களில் பயணியர் நிழற்குடை அமைக்க அடிக்கல்

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரிசல்குளம் மற்றும் துறையூர் கிராமங்களில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடைகளை அமைக்க கனிமொழி எம்.பி.. அடிக்கல் நாட்டினார். விழாவில் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார். கூடுதல் ஆட்சியர்  தாக்கரே சுபம் ஞானதேவராவ், , மாவட்ட வருவாய் அலுவலர். அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஒன்றியக் கழகச் செயலாளர்கள் முருகேசன் ராதாகிருஷ்ணன் […]

கோவில்பட்டி

கிராம ஊராட்சிகளில் சேவை கட்டணத்தை நாளை முதல் ஆன்லைன் மூலமே பெறவேண்டும்

கிராம ஊராட்சிகளில் வீடு, சொத்து, குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஆன்லைனில் மட்டுமே பெற உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் கிராம ஊராட்சிகளில் புதிய கட்டிடத்திற்கான அனுமதி இணையதளம் மூலம் வழங்கப்படும். புதிய கட்டிடங்களுக்கு அனுமதி பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஊரகப் பகுதிகளில் புதிய கட்டிடங்களுக்கான அனுமதி வழங்க கிராம ஊராட்சி செயலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் எந்தவொரு சேவைக்கும் கட்டணத்தை இணையம் மூலமே பெற வேண்டும். கிராம ஊராட்சிகளில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவில்பட்டி அருகே  கிழவிப்பட்டியில் இன்று (10.6.2023) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .பெ.கீதா ஜீவன் ஆகியோர் தலைமை தாங்கி  பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.  மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப்  பெற்றுக்கொண்டு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும் பணி நாளை

தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை பெருவிழா நடந்து வருகிறது. இறுதி நாளான ஆகஸ்ட் 5-ந் தேதி நகர வீதிகளில் தூய பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.  முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் பவனி நடைபெறுவது வழக்கம்.  அதன்படி பேராலய வரலாற்றில் இதுவரை 15 […]

கோவில்பட்டி

ஒடிசாவில் தேசிய போட்டி: தமிழக ஜூனியர் ஆக்கி அணியில் கோவில்பட்டி வீரர்-வீராங்கனைகள்; மேலாளராக

ஒடிசா மாநிலம்  ரூர்கேலா நகரில் வருகிற  ஜூன் 12-ந்தேதி திங்கட்கிழமை முதல் நடக்க இருக்கும் ஜூனியர் ஆண்கள்  தேசிய ஆக்கி போட்டியில் தமிழக அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது தமிழக ஆண்கள் அணியில் கோவில்பட்டி வீரர்கள் ஆனந்தராஜ், மாதவன் ,நவீன் ராஜ்குமார், இசக்கிமுத்து, சீனிவாசன், மணிசங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தமிழக அணியின் மேலாளராக கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெய் கணேஷ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.  இந்த போட்டியை தொடர்ந்து ஜூன் […]

செய்திகள்

டாக்டர் மைத்ரேயன், மீண்டும் பா.ஜனதாவில் இணைந்தார்

புற்றுநோய் டாக்டரான மைத்ரேயன் 1999ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அதன்பிறகு  டாக்டர் மைத்ரேயன், மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார். ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் செல்வாக்குடன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார்.. கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினார். அதன் பிறகு மீண்டும் ஓ.பன்னீர்செல்வம்  அணிக்கு சென்றார். […]