கோவில்பட்டி அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவில்பட்டி அருகே கிழவிப்பட்டியில் இன்று (10.6.2023) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .பெ.கீதா ஜீவன் ஆகியோர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் .கா.கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் .சு.கஸ்தூரி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் க.சந்திரசேகர், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர்.க.மகாலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் .தங்கமாரி, கிழவிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்.க.வள்ளியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்,

வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இன்று கனிமொழி எம்.பி. திறந்துவைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் கீதாஜீவன் குத்துவிளக்கேற்றினார்.
கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் ., மாவட்ட வருவாய் அலுவலர். அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
