ஒடிசாவில் தேசிய போட்டி: தமிழக ஜூனியர் ஆக்கி அணியில் கோவில்பட்டி வீரர்-வீராங்கனைகள்; மேலாளராக உடற்கல்வி ஆசிரியர் நியமனம்

உடற்கல்வி ஆசிரியர் ஜெய்கணேஷ்
ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரில் வருகிற ஜூன் 12-ந்தேதி திங்கட்கிழமை முதல் நடக்க இருக்கும் ஜூனியர் ஆண்கள் தேசிய ஆக்கி போட்டியில் தமிழக அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது
தமிழக ஆண்கள் அணியில் கோவில்பட்டி வீரர்கள் ஆனந்தராஜ், மாதவன் ,நவீன் ராஜ்குமார், இசக்கிமுத்து, சீனிவாசன், மணிசங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தமிழக அணியின் மேலாளராக கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெய் கணேஷ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த போட்டியை தொடர்ந்து ஜூன் 27-ந் தேதி முதல் அதே மைதானத்தில் ஜூனியர் பெண்கள் தேசிய ஆக்கி போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் தமிழக அணியில் கோவில்பட்டி வீராங்கனைகள் மும்மண்ஜா, முகேஸ்வரி , பாம்பிலா ஆகியோர் தேர்வாகி தமிழக அணிக்காக விளையாட உள்ளனர் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் அனைவரையும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி, மூத்த துணைத் தலைவர் நாகமுத்து, பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா, துணைத் தலைவர்கள் உமா சங்கர் ,அழகுதுரை, மணிமாறன், துணைச் செயலாளர்கள் முருகன், ,மாரியப்பன், சந்தானம், வழக்கறிஞர் பெரியதுரை மற்றும் உறுப்பினர்கள் தங்கராஜ், ஜார்ஜ் ஈஸ்டர் கிருஷ்ணமூர்த்தி வசந்த ராஜன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
