கரிசல்குளம், துறையூர் கிராமங்களில் பயணியர் நிழற்குடை அமைக்க அடிக்கல்

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரிசல்குளம் மற்றும் துறையூர் கிராமங்களில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடைகளை அமைக்க கனிமொழி எம்.பி.. அடிக்கல் நாட்டினார்.
விழாவில் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார். கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவராவ், , மாவட்ட வருவாய் அலுவலர். அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஒன்றியக் கழகச் செயலாளர்கள் முருகேசன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

