திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டியில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் புனித சந்தியாகப்பர் குதிரையில் வலம் வந்து மக்களை காப்பதாக நம்ப படுகிறது.இன்று காலை 8. 30 மணிக்கு புனித சந்தியாகப்பர் தேவாலயத்தின் முன் அதிசயமாக நீரூற்று ஏற்பட்டு உள்ளது. இதை அந்த பகுதி மக்கள் தெய்வசெயலாக பார்த்து வருகின்றனர்.இந்த புனித சந்தியாகப்பர் திருத்தல ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 10 மணி […]
எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டுகளுக்கு முதல்-அமைச்சர் நேரடியாக பதில் அளிக்கவேண்டும்; டி.ஜெயக்குமார் அறிக்கை
அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் நேற்று (23.05.2023) வெளியிட்ட அறிக்கையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும் கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாகவும், தொழில் துறையின் முன்னேற்றத்திற்காகவும் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள், தொடர்ந்து 2019-ல் அமெரிக்கா, துபாய் பயணங்கள் மற்றும் 2020-ஆம் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில் *வசந்ததிருவிழா* இன்று 24-ந் தேதி தொடங்கியது. காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது, இன்று இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கோயில் வசந்த மண்டபத்தில் வேதபாராயணம் தேவார இன்னிசையுடன் உலா வருதல். நடக்கிறது. ஜூன் 2 -ந் தேதி வரை வசந்த திருவிழா நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது,. விழா நிறைவு நாளன்று வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் காலை […]
ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) என்பது 115 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கிட்டத்தட்ட 5 லட்சம் செயலில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் மில்லியன் கணக்கான முன்னாள் மாணவர்களைக் கொண்ட உலகளாவிய இளம் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் மே 23 -ந்தேதியை தேசிய பயிற்சி தினம் என்று கொண்டாடி வருகிறது. இந்த நாளில் ஜே.சி.ஐ.உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று தேசிய பயிற்சி தினம் […]
லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான நேற்று மாலை 5. மணிக்கு தொடங்கிய 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை, யூனியன் பேங்க், மற்றும் ஹூப்ளி, சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணிகள் மோதின. ஆரம்பத்தில் இருந்தே மும்பை யூனியன் பேங்க் அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அணி வீரர்கள் அடுத்தடுத்து கோலகள் போட்டபடி இருந்தனர். 18-வது […]
திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டிபுதூரில் பழமையான புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. திருத்தலத்தின் ஆண்டு திருவிழா கடந்த 13ஆம் தேதி நவநாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.நவநாள் நடைபெற்ற நாட்களில் ஒவ்வொரு நாள் மாலையும் புனித சலேத் மாதாவின் திரு உருவம் தாங்கிய கொடி, மற்றும் புனித சலேத் மாதா மின் ரதம் போன்றவை ஜெபமாலை ஊர்வலத்துடன் நடைபெற்று நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புனித சலேத் மாதா திருவிழா கொடியேற்று விழா கடந்த 21-ந் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கொடியேற்ற விழா […]
கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் அன்பரசன் (வயது 27), ஏசி மெக்கானிக் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் புளியங்குளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் மகன் கேசவன் (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை சென்றார்.அங்கு பணிகளை முடித்துவிட்டு இருவரும் பைக்கில் ஊருக்கு திரும்பினர். கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி அடுத்த பெத்தேல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது , சாலையில்டயர் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் […]
தமிழ்நாட்டுக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். ஜப்பான், சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள், வர்த்தக அமைப்பினர், அதிகாரிகளை சந்திக்க உள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11.25 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்பட்டார் . இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்றடைந்தார். அங்கு 2 நாள் நடைபெறும் நிகழ்ச்சிகளில்பங்கேற்கிறார். தொடர்ந்து, 25-ந்தேதி ஜப்பான் செல்கிறார். அங்கு […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் கோவில்பட்டி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ,மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணை தலைவர் முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டட பா.ஜனதா பொதுசெயலாளர்கள் வேல்ராஜா, சரவணா கிருஷ்ணன், கிஷோர்குமார், மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர், வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கும் , […]
கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமநாயக்கன்பட்டியை சேர்ந்த மரிய சேசுராஜ், குமார், சூசை பிரான்சிஸ் உட்பட 30க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சிகளில் இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். இவர்கள் கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா,கோவில்பட்டியூனியன் […]