கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் தேசிய பயிற்சி தினம்; தொழில் முனைவோருக்கு முக்கிய ஆலோசனைகள்

ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) என்பது 115 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கிட்டத்தட்ட 5 லட்சம் செயலில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் மில்லியன் கணக்கான முன்னாள் மாணவர்களைக் கொண்ட உலகளாவிய இளம் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் கூட்டமைப்பு ஆகும்.
இந்த அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் மே 23 -ந்தேதியை தேசிய பயிற்சி தினம் என்று கொண்டாடி வருகிறது. இந்த நாளில் ஜே.சி.ஐ.உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு நேற்று தேசிய பயிற்சி தினம் கடைபிடிக்கப்பட்டது. கோவில்பட்டி ஜே.சி.ஐ.அமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சி எட்டயபுரம் சாலையில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க கட்டிடத்தில் நேற்று மாலை நடத்தப்பட்டது. வழி நடத்தப்படும் நோக்கம் என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஜே.சி,ஐ.தலைவர் தீபன்ராஜ் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 18-வது மண்டல தலைவர் ராஜலிங்கம், சிறப்பு கவுரவிப்பாளராக மண்டல துணை தலைவர் எல்.தீபக், பயிற்சியாளர் கே.எஸ்.ஷிபி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
ஜே.சி.ஐ.துணை தலைவர் ரகுபதி, செயலாளர் சூர்யா, உடனடி முன்னாள் தலைவர் பிரசன்னா, ஜே.காம் சேர்மன் அருண்பிரசாத் மற்றும் பல்வேறு தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் பொது சுபஸ்ரீ என்ற பெண் ஜே.சி.ஐ.உறுப்பினராக பதவி ஏற்ற்க்கொண்டார். அவருக்கு ஜே.சி.ஐ.தலைவர் தீபன் ராஜ் வரவேற்று பேட்ஜ் வழங்கினார்.

நிகழச்சியில் தீபக் பேசுகையில், “இந்த அமைப்பில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே உறுபினராக இருக்க முடியும்.. ஜே.சி.ஐ.அமைப்பில் 25 மண்டலங்கள் உள்ளன.. தமிழ்நாட்டில் மட்டுமே 4 மண்டலங்கள் உள்ளன, ஜே.சி.ஐ.அமைப்புக்கு தனியாக ஜே.சி.பவன் என்ற பெயரில் கோவில்பட்டியில் சொந்த கட்டிடம் இருப்பது பெருமைக்குரியதாகும்” என்றார்,
ராஜலிங்கம் பேசும்போது, “ நான் இந்த அமைப்பில் சேரும்போது பேசுவதற்கு கூச்சப்படுவேன். இப்போது தெளிவாக உரையாயாற்றும் அளவுக்கு வந்து இருக்கிறேன், இந்த அமைப்பில் சேர்ந்தால் பேச்சு திறன் கூடும். தொழில் வாய்ப்ப்புகள் அதிகரிக்கும். நான் இந்த அமைப்பில் சேர்ந்ததால் தான் எனது ஊரான விருதுநகரை விட்டு வெளியே வந்து பிசினஸ் செய்யமுடிகிறது. இல்லாவிட்டால் அந்த ஊரிலேயே தான் இருந்திருக்கூடும்.” என்று குறிப்பிட்டார்.
தொழில் முனைவோர் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி பயிற்சியாளர் கே.எஸ்.ஷிபி கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-
ஒவ்வொரு தொழிலிலும் வாடிக்கையாளர் திருப்தி என்பது மிக முக்கியம். ஒவ்வொரு வாடிக்கையாளரின் மனநிலை அறிந்து அவர்களை அணுக வேண்டும். கோபம் என்பது கூடாது. நான் காலையில் மார்த்தாண்டத்தில் இருந்து இங்கு வந்து சேருவதற்குள் எத்தனையோ பிரச்சினைகள் , நான் எதற்கும் கோபப்படவில்லை. நான் கோபப்பட்டே பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

எனது தந்தை பிரபலமானவர், அவரை வைத்து தான் என்னை அடையாளப்படுத்துவார்கள். நான் இந்த அமைப்பில் சேர்ந்தவுடன் சில சமூக செயல்களில் ஈடுபட்டேன்.இதன் மூலம் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்றோர் அறிமுகம் கிடைத்தது. இப்போது எனக்கென்று ஒரு தனி அடையாளம் வந்து விட்டது.
உணர்வுசார் நுண்ணறிவு என்பது உங்கள் சொந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நிர்வகிக்கும் திறன் என வரையறுக்கப்படுகிறது, அத்துடன் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகளை அடையாளம் கண்டு பாதிக்கிறது
உணர்ச்சி நுண்ணறிவின் கூறு
சுய விழிப்புணர்வு,சுய ஒழுங்குமுறை, சமூக திறன்கள், பச்சாதாபம், உறவு மற்றும் வேலையாட்களை கையாளுதல் ஆகியவற்றை கடைப்பிடித்தாலே போதும். நீங்கள் எதிலும் சாதித்துவிடலாம். உள்ளுக்குள் வலுவான உணர்ச்சிகளை உணர்ந்தாலும் சமநிலையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும்.
எனது உணர்ச்சிகள் பற்றி எனக்குத் தெரியும் அல்லது பெரும்பாலான நேரங்களில் நான் என்ன உணர்கிறேன்?
எனது பலம் மற்றும் பலவீனங்களை என்னால் விரிவாக பட்டியலிட முடியும்
நான் உள்ளுக்குள் வலுவான உணர்ச்சிகளை உணர்ந்தாலும் நான் சமநிலையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருப்பேன்
இவ்வாறு ஷிபி பேசினார்.
மேலும் அவர் கீழ்க்கண்ட 10 கேள்விகள் கேட்டு பதில் வாங்கி மார்க் போட்டார்.
1) எனது உணர்ச்சிகள் பற்றி எனக்குத் தெரியும் அல்லது பெரும்பாலான நேரங்களில் நான் என்ன உணர்கிறேன்?
2) எனது பலம் மற்றும் பலவீனங்களை என்னால் விரிவாக பட்டியலிட முடியும்
3) நான் உள்ளுக்குள் வலுவான உணர்ச்சிகளை உணர்ந்தாலும் நான் சமநிலையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருப்பேன்
4) எனது எண்ணஙகளையும் மக்களின் தீர்ப்புகளையும் நான் தீவிரமாக நிர்வகிக்கிறேன்
5) நான் இலக்குகளை நிர்ணயித்து, முடிவை நோக்கி எனது முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறேன்
6) சிரமங்கள் அல்லது தாமதங்கள் ஏற்படும் போது, இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் மற்றும் பிற வழிகளைத் தேடுகிறேன்
7) நான் ஒரு நல்ல கேட்பவன் அல்லது நான் அக்கறையுள்ளவன் என்று வெவ்வேறு நபர்கள் கூறியுள்ளனர்
8) மற்றவர்களின் விருப்பங்களையும் உணர்ச்சிகளையும் துல்லியமாகப் படிக்கிறேன்
9) நான் தனிப்பட்ட மோதல்கள் மற்றும் வேறுபாடுகளை திறமையாக கையாளுகிறேன்
10) நான் நெட்வொர்க்கிங் மற்றும் உறவுகளை கட்டியெழுப்புவதில் நல்லவன் என்று மக்கள் கூறுகிறார்கள்
ஒவ்வொருவரும் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பெற்ற மதிப்பெண்கள் உங்களை நீங்கள் எவ்வளவு உணர்வுபூர்வமாக அறிவாளியாக பார்க்கிறீர்கள் என்பதற்கான குறிகாட்டியாகும் என்று ஷிபி குறிப்பிட்டார்.
