கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: மும்பை, டெல்லி, சென்னை அணிகள் வெற்றி

லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.
ஆறாம் நாளான நேற்று மாலை 5. மணிக்கு தொடங்கிய 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை, யூனியன் பேங்க், மற்றும் ஹூப்ளி, சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணிகள் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே மும்பை யூனியன் பேங்க் அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அணி வீரர்கள் அடுத்தடுத்து கோலகள் போட்டபடி இருந்தனர்.
18-வது நிமிடத்தில் மும்பை, யூனியன் பேங்க் அணி வீரர் செல்சி. 34-வது நிமிடத்தில் த்ரிஸுல் 37-வது நிமிடத்தில் அன்கிட் கவுட்., 49-வது நிமிடத்தில் த்ரிஸுல். 56-வது நிமிடத்தில் மீண்டும் த்ரிஸுல், 58-வது நிமிடத்தில் செல்சி ஆகியோர் கோல்கள் போட்டனர்.

அவர்களை எதிர்த்து கோல் முடியாமல் தவித்த சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணிக்கு ஆட்டம் முடியும் நேரத்தில் அதாவது 60-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் பாலச்சந்திரன் தஞ்சூர் ஒரு கோல் போட்டார். இறுதியில் மும்பை யூனியன் பேங்க் அணி 6-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
சிறந்த ஆட்டக்காரர் விருது மும்பை, யூனியன் பேங்க் அணி வீரர் த்ரிஸுல்க்கு வழங்கப்பட்டது.
சுப்பையா தாஸ் மற்றும் பிரைஜு ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
20-வது லீக் ஆட்டத்தில் டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு, மற்றும் பெங்களூரு, ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் அணிகள் மோதின

ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வீரர் ஜக்வந்த் சிங் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 27-வது நிமிடத்தில் அதே அணி வீரர் ஹர்பல் சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
40-வது நிமிடத்தில் பெங்களூரு, ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் வீரர் துருவா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
57-வது நிமிடத்தில்டெல்லி அணி வீரர் தல்விந்தர் சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 59-வது நிமிடத்தில் பெங்களூரு அணி வீரர் சுனில் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
இதில் 3:2 என்ற கோல் கணக்கில் டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றிப் பெற்றது.
சிறந்த ஆட்டக்காரர் விருது பெங்களூரு, ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் வீரர் நகுல் மல்நாட்க்கு வழங்கப்பட்டது. சுரேஷ் மற்றும் கோபிநாத் ரவி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
21-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, கனரா பேங்க் மற்றும் சென்னை இந்தியன் பேங்க் ஆகிய அணிகள் மோதின
ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் அபிஷேக் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
இதை தொடர்ந்து சென்னை இந்தியன் பேங்க் அணி வீரர்கள் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. அடுத்தடுத்து 3 கோல்கள் போடட்டு வெற்றிக்கனியை பறித்தனர்.
9-வது நிமிடத்தில் சென்னை இந்தியன் பேங்க் அணி வீரர் ஹரிஹரன் பீல்டு கோல் முறையில் பதிலுக்கு ஒரு கோல் போட்டார்.
45-வது நிமிடத்தில் சென்னை இந்தியன் பேங்க் வீரர் விநோதன் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 53-வது நிமிடத்தில் சென்னை இந்தியன் பேங்க் வீரர் சந்தோஷ்குமார் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். இறுதியில் இதில் 3:1 என்ற கோல் கணக்கில் சென்னை இந்தியன் பேங்க் அணி வெற்றிப் பெற்றது.
சிறந்த ஆட்டக்காரர் விருது சென்னை இந்தியன் பேங்க் வீரர் சுப்பிரமணிக்கு வழங்கப்பட்டது ஹசன் அலி மற்றும் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
.
