கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வசந்த திருவிழா தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில் *வசந்ததிருவிழா* இன்று 24-ந் தேதி தொடங்கியது. காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது,
இன்று இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கோயில் வசந்த மண்டபத்தில்
வேதபாராயணம் தேவார இன்னிசையுடன் உலா வருதல். நடக்கிறது.

ஜூன் 2 -ந் தேதி வரை வசந்த திருவிழா நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது,. விழா நிறைவு நாளன்று வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் காலை 10. மணிக்கு : *பஞ்சமூர்த்திகள்* சிறப்பு அபிஷேகம்
காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது, இரவு 7 மணிக்கு : *பஞ்சமூர்த்திகள்* திருவீதி உலா வருதல் நடைபெறும்.
