• June 7, 2025

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல பேரியக்கம்; பா.ஜனதா செயற்குழுவில் முடிவு

 மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல பேரியக்கம்; பா.ஜனதா செயற்குழுவில் முடிவு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் கோவில்பட்டி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

,மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணை தலைவர் முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்டட பா.ஜனதா பொதுசெயலாளர்கள் வேல்ராஜா, சரவணா கிருஷ்ணன், கிஷோர்குமார், மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்,

வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கும் , கட்சியின் பூத் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும்  மே30 முதல் ஜூன் 30 வரை  மத்திய அரசின் 9 ஆண்டுகால  சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல மக்கள் தொடர்பு பேரியக்கம் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மே 28 ம் தேதி முதல் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 17 ஒன்றியங்களிலும் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,. மேலும் நிரஈவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

  • தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூயிஸ் பிரான்சிஸ் பணியில் இருந்தபோது மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செயப்பட்டார். அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதுடன், இது போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினை கண்டுகொள்ளாமல் இருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்,
  • *சட்டம்- ஒழுங்கை பராமரிக்க தவறி கள்ளசாராய சாவிற்கு காரணமான திமுக அரசை கண்டிப்பதுடன், அரசு மதுபானகடைகளில் குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு விற்று ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலகவேண்டும்.
  • *தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி தொகுதிக்கு எவ்வித புதிய தொழிற்சாலைகளோ, வேலை வாய்ப்புக்களோ ஏற்படுத்த ஏற்பாடு செய்யாமல் சென்னையில் அமர்ந்து கொண்டு தூத்துக்குடியை புறக்கணிப்பதை கண்டிக்கிறோம்,
  • மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *