கடம்பூர் ராஜு முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்த மாற்று கட்சியினர்

கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமநாயக்கன்பட்டியை சேர்ந்த மரிய சேசுராஜ், குமார், சூசை பிரான்சிஸ் உட்பட 30க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சிகளில் இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.
இவர்கள் கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா,கோவில்பட்டியூனியன் துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் செல்வகுமார்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில் விழாவில் பங்கேற்பு
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட ஆலம்பட்டி தெற்கு தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தீர்த்த குடம் எடுத்தல் அக்னி எடுத்து ஊர்வலம் வந்து. அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாரணங்கள் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா,கோவில்பட்டி யூனியன துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், கவுன்சிலர் கவியரசன், மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் செல்வகுமார், ஆலம்பட்டி தெற்கு தெரு கிளை செயலாளர் முருகன், ஆலம்பட்டி தெற்கு தெரு கிளை பிரதிநிதி கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
