• June 7, 2025

திண்டுக்கல் மறவபட்டி புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் அதிசய நீரூற்று

 திண்டுக்கல்  மறவபட்டி புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் அதிசய நீரூற்று

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டியில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் புனித சந்தியாகப்பர் குதிரையில் வலம் வந்து மக்களை காப்பதாக நம்ப படுகிறது.
இன்று காலை 8. 30 மணிக்கு புனித சந்தியாகப்பர் தேவாலயத்தின் முன் அதிசயமாக நீரூற்று ஏற்பட்டு உள்ளது. இதை அந்த பகுதி மக்கள் தெய்வசெயலாக பார்த்து வருகின்றனர்.
இந்த புனித சந்தியாகப்பர் திருத்தல ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நவநாள் திருப்பலி மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது இதில் நாகர்கோவில் கன்னியாகுமரி கோயமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இரவு தங்கி சாமி தரிசனம் செய்கின்றனர்.
ஏற்கனவே 120 தடவைக்கு மேல் இது போன்று அதிசய நீரூற்று தோன்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மழை குறைவான பகுதியாக உள்ள மறவபட்டியில் திடீரென நீர் ஊற்று ஏற்பட்டுள்ளது. இது எங்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிசய நீரூற்று எங்களை நேசிக்க வைக்கிறது என்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *