கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தில் தென்மாவட்ட ஆக்கி போட்டி தொடக்கம்

கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அகாடமி சார்பாக தென்மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் நேற்று தொடங்கியது . சனிக்கிழமை வரை போட்டி நடைபெறுகிறது.
முதல் போட்டியாக பாரதி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இலுப்பையூரணி அம்பேத்கர் ஆக்கி அணிகள் மோதின. ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் மற்றும் கோவில்பட்டி 32 வது நகர்மன்ற உறுப்பினர் கவியரசன் ஆகியோர் போட்டியை தொடக்கி வைத்தார்கள்.

யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி கிளப் செயலாளர் மாரியப்பன் மற்றும் 33வது நகர்மன்ற உறுப்பினர் சண்முகராஜா ஆகியோர் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள்
முதல் போட்டியில் சந்தித்த இரு அணியினரும் சம பலத்துடன் இருந்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இருப்பினும் இலுப்பையூரணி அணி வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயனபடுத்தி கோல்கள் போட்டனர்..

ஆட்ட முடிவில் இலுப்பையூரணி அம்பேத்கர் ஆக்கி அணி 5- 2 என்ற கோல் கணக்கில் பாரதி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்,. ‘
தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டுக்கழக அணியும் திட்டங்குளம் பாரதி ஆக்கி ஆணியினரும் மோதினார்கள். இதில் 2-1 என்ற கோல் கணக்கில் திட்டங்குளம் பாரதி ஆக்கி அணியினர் வெற்றி பெற்றனர்.
