• June 7, 2025

Month: November 2022

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்; தே.மு.தி.க.வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் சுபபிரியா, மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி, நகர நிர்வாகிகள் ஆழ்வார், பாலு, தங்கமணி மற்றும் நகர பொருளாளர் பிரசன்னா ஆகியோர் கோவில்பட்டி ரெயில் நிலைய மேலாளரை நேரில் சந்த்தித்து கோரிக்கை மனு அளித்தனர், […]

தூத்துக்குடி

குழந்தைகள் தின விழா; கலெக்டர் இனிப்பு வழங்கினார்

குழந்தைகள் தின விழா இன்று(நவம்பர் 14) கொண்டாடப்பட்டு வருகிறது, தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், மாற்றுத்திறனுடைய இளம் சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கிநார். மேலும் சிறார்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரோஜா பூக்களையும் வழங்கினர்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து மாற்றுத்திறனுடைய இளம் சிறார்களுக்காக கல்வி சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தைகலெக்டர் .செந்தில் ராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் […]

கோவில்பட்டி

80-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை

கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமிற்கு அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமை வைத்தார். பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் காளிதாஸ் முன்னிலை வைத்தார்.முகாமில் கலந்து கொண்ட 80க்கும் மேற்பட்டோர்களுக்கு டாக்டர் கிருஷ்ண வேணி மருத்துவ பரிசோதனை செய்தார். 18 பேர் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர் நடராஜபுரம் தெரு, பொதுமக்கள் நல வாழ்வு இயக்க தலைவர் செண்பகம் ஆவல்நத்தம் விவசாய […]

கோவில்பட்டி

பெண்ணின் பிரசவத்துக்கு ரத்த தானம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட இது குறித்து தகவல் கிடைத்ததும் மனித நேயத்துடன் வேல்சாமி, கமல், மாரியப்பன், மாரியப்பன், கணேசன், ஹால்நிசக், கார்த்திக், வேல்முருகன், கண்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஜீவ அனுக்கிரக பொது நல அறக்கட்டளை , மாவீரன் பகத்சிங் ரத்த தானகழகம் , காமராஜர் ரத்ததான கழகம் சார்பாக ராஜேந்திரன் காளிதாஸ், ராசுபாண்டியன், அருண்பாண்டியன் ஆகியோர் செய்து இருந்தனர்.

கோவில்பட்டி

பா.ஜனதாவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்

கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர், பாரதிய ஜனதா கட்சியுடன் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை வகித்தார்.நாம் தமிழர் கட்சியினர் நிர்வாகி செண்பகராஜ் தலைமையில் சுமார் 50 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி, நகர தலைவர் சீனிவாசன், நகர […]

செய்திகள்

இசை அமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்; மோடி

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது.இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அம்பாத்துரை ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கார் மூலம் பலகலைக்கழக விழா மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு பிரதமர், கவர்னர் முதல்-அமைச்சர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர், கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

செய்திகள்

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் வருகை: பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெறுகிறது.இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகலுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார்.மேலும் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்குகிறார் . தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது

கோவில்பட்டி தெற்கு பஜாரில் உள்ள ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற இருக்கிறது, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடக்கும்.முகாமை புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க.தமிழரசன் தொடக்கி வைக்கிறார்.முகாமில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதிருக்கும் கண் சம்பந்தமான இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை, விழிலென்ஸ் , உணவு, […]

செய்திகள்

10 சதவீத இடஒதுக்கீட்டில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது; அ.தி.மு.க, அமைப்பு செயலாளர்

அ.தி.மு.க, அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-நம்மை ஆளாக்கிய இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியை ஈட்டியது போல்,அரசியலில் இரட்டை வேடம் போட்டு தானும் வெற்றி பெறலாம் என்ற மமதையில்இந்த விடியா அரசை தலைமை தாங்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்தற்போது கனவில் மிதந்து வருகிறார்.‘புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள்’ என்றுஒரு அதிபுத்திசாலி சொல்லுவது போல், பொருளாதாரத்தில் பின் […]

செய்திகள்

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள மலை கிராமங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 27 மில்லி மீட்டர் மழை […]