• June 8, 2025

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

 குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள மலை கிராமங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

அதேபோல, தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி மற்றும் சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் மட்டும் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *