• June 8, 2025

குழந்தைகள் தின விழா; கலெக்டர் இனிப்பு வழங்கினார்

 குழந்தைகள் தின விழா; கலெக்டர் இனிப்பு வழங்கினார்

குழந்தைகள் தின விழா இன்று(நவம்பர் 14) கொண்டாடப்பட்டு வருகிறது, தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், மாற்றுத்திறனுடைய இளம் சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கிநார். மேலும் சிறார்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரோஜா பூக்களையும் வழங்கினர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து மாற்றுத்திறனுடைய இளம் சிறார்களுக்காக கல்வி சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தை
கலெக்டர் .செந்தில் ராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் செந்தில்ராஜ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *