• June 8, 2025

கோவில்பட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்; தே.மு.தி.க.வலியுறுத்தல்

 கோவில்பட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்; தே.மு.தி.க.வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் சுபபிரியா, மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி, நகர நிர்வாகிகள் ஆழ்வார், பாலு, தங்கமணி மற்றும் நகர பொருளாளர் பிரசன்னா ஆகியோர் கோவில்பட்டி ரெயில் நிலைய மேலாளரை நேரில் சந்த்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் முன்பதிவு மற்றும் பயணசீட்டு வழங்கும் இடமும் போதிய இடவசதி இல்லாமல் ஒரே பகுதியில் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அவை தனித்தனியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தென் மாவட்டங்களில் கோவில்பட்டி மிக முக்கிய நகரமாகும். இங்குள்ள ரெயில் நிலையத்தில் சில ரெயில்கள் நிற்காமல் செல்கின்றன, இதனால் பொது மக்கள், வணிகர்கள், ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே அனைத்து ரெயில்களும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *