• June 8, 2025

தூத்துக்குடி காவல்துறை ரோந்து பணிக்கு 7 வாகனங்கள்

 தூத்துக்குடி காவல்துறை ரோந்து பணிக்கு 7 வாகனங்கள்

தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூ 64,79,431/- மதிப்புள்ள 7 நான்கு சக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார், கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், தாளமுத்துநகர், சிப்காட், முத்தையாபுரம் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல் நிலைய ரோந்துப் பணிக்கு வழங்கினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் , மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர் கணேச மணிகண்டன் உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *