• June 8, 2025

80-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை

 80-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை

கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமிற்கு அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமை வைத்தார். பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் காளிதாஸ் முன்னிலை வைத்தார்.
முகாமில் கலந்து கொண்ட 80க்கும் மேற்பட்டோர்களுக்கு டாக்டர் கிருஷ்ண வேணி மருத்துவ பரிசோதனை செய்தார். 18 பேர் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர் நடராஜபுரம் தெரு, பொதுமக்கள் நல வாழ்வு இயக்க தலைவர் செண்பகம் ஆவல்நத்தம் விவசாய சங்க தலைவர் லட்சுமணன் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மருத்துவமனை ஊழியர்கள் நிவேதிதா சிந்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பாக இந்த முகாம் நடைபெற்றது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *