• June 8, 2025

கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது

 கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது

கோவில்பட்டி தெற்கு பஜாரில் உள்ள ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற இருக்கிறது, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடக்கும்.
முகாமை புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க.தமிழரசன் தொடக்கி வைக்கிறார்.
முகாமில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதிருக்கும் கண் சம்பந்தமான இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை, விழிலென்ஸ் , உணவு, தங்குமிடம் போக்குவரத்து செலவு அனைத்தும் கிருஷ்ணன் கோவில் சங்கரா மருத்துவமனையால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கு குறைந்த செலவில் தரமான முறையில் கண் அறுவை சிகிச்சை செய்து தரப்படும்.
அறுவை சிகிச்சைக்கென முகாமிற்கு வரும் நோயாளிகள் இருதயநோய், ரத்தகொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்துமா உள்ளவர்கள் முன்னரே மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று அவர்கள் தற்போது சாப்பிடும் மருந்து, மாத்திரைகளை கையோடு கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *