பா.ஜனதாவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்

கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர், பாரதிய ஜனதா கட்சியுடன் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை வகித்தார்.
நாம் தமிழர் கட்சியினர் நிர்வாகி செண்பகராஜ் தலைமையில் சுமார் 50 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி, நகர தலைவர் சீனிவாசன், நகர பொது செயலாளர்கள் விஜயகுமார், அசோக், நகர பொருளாளர் பாலமுருகன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
