• June 6, 2025

Month: September 2022

தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குறைபாடுகளை சரி செய்யக்கோரி கலெக்டரிடம் பா.ம.க.வினர் மனு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான விவசாயிகள், அடித்தட்டு மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் வார்டு கழிப்பறைகளில் கதவு இல்லாமல் உள்ளது.இதனால் உள்நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு கதவுகள் அமைக்க வேண்டும். நோயாளிகளுக்கு மாத்திரைகள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வாகன சோதனை: புகையிலை பொருட்கள் கடத்திய 6 பேர் சிக்கினர்

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மதுபானம் விற்பனையை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், சப்- இன்ஸ் பெக்டர்கள் மாதவராஜ், நாராயணசாமி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தனிப்படை போலீசார் எட்டயபுரம் ரோடு தொழில் பேட்டை அருகில் இரவு நேரத்தில் வாகன சோதனை நடத்தினா். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த தடி வீராசாமி (வயது 52) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். ல் அப்போது, […]

கோவில்பட்டி

தலையில் முக்காடு போட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினா்.விளாத்திகுளம் தாலுகா மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரியில் எந்திரங்கள் மூலம் ஏராளமான டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பவர்களை தடுத்து நிறுத்தவும், மணல் குவாரி உரிமையை ரத்து செய்ய வேண்டும் […]

கோவில்பட்டி

போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி சி.சி. மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.கூட்டத்திற்கு கவுரவ தலைவர் பிச்சையா தலைமை தாங்கினார், செயலாளர் துரைராஜ், துணைச்செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பொருளாளர் ராமன் வரவேற்று பேசினார், தலைவர் ராமச்சந்திரன் சங்க வளர்ச்சி பற்றி பேசினார், சங்க உறுப்பினர்களுக்கு இன்சூரன்ஸ் தொடர்பாகவும், மற்றும் பயிற்சி வகுப்புகள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன, துணைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்ட […]

செய்திகள்

தி.மு.க.வில் இருந்து விலகியதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிப்பு

தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொது செயலாளர் பதவியை ராஜினமா செய்ததாக தகவல்கள் பரவி வந்தன.சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.இந்த நிலையில், தி.மு.க.வில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை ……

கோவில்பட்டி

கோவில்பட்டியில், பிரதமர் மோடி பிறந்தநாள் கபடி போட்டி

கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அளவில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் எம்.பி. காளிதாசன் ஏற்பாட்டில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தப் பட்டது. போட்டியில் 72 அணிகள் கலந்து கொண்டன. காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பார்வையாளர்கள் திரண்டு வந்து ரசித்தனர், பகல், இரவு நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு ஆட்டமும் விறுவிறுப்பாக இருந்தது, பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர். போட்டியின் இறுதியில் […]

கோவில்பட்டி

கி.ராஜநாராயணன் சொந்த ஊரில் நினைவு மண்டபம் கட்டும்பணி; வைகோ தொடக்கி வைத்தார்

கரிசல் இலக்கத்தின் பிதாமகர் சாகித்ய அகடாமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நூற்றாண்டு விழா மற்றும் நினைவு மண்டபம் கட்டும் விழா கோவில்பட்டி அருகே உள்ள கி.ரா. பிறந்த ஊரான இடைச்செவல் கிராமத்தில் நடைபெற்றது.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. பங்கேற்றுநினைவு மண்டபம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:- கி.ரா. நாவல்கள், சிறுகதைகள்.. கரிசல் இலக்கியங்கள், வட்டார சொல் அகராதி எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் அவருக்கு […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம்

அ.தி.மு.க.வில் பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியது. அதேபோல் அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு சாதமாகவே சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானது.இந்நிலையில் இன்று(19ந் தேதி) இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். 3 நாட்கள் அவர் டெல்லியில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலரும் […]

தூத்துக்குடி

கோவில் உண்டியல் திருடனை பிடித்த சப்-இன்ஸ்பெக்டருக்கு வெகுமதி- பாராட்டு

கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால் மற்றும் போலீசார் பணிக்கர்குளம் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தெற்கு இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த பூல்பாண்டி மகன் சதீஷ் (19) என்பதும் அவர் வடக்கு இலந்தைகுளம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் உண்டியலை உடைத்து ரூ. 2,050/- திருடியதும் தெரியவந்தது.உடனே மேற்படி உதவி ஆய்வாளர். பால் மற்றும் போலீசார் எதிரி சதீஷை கைது […]

செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி ஒரு நாள் லீவு எடுக்கும் போராட்டம்; அரசு

2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் பங்களிப்பு பென்சன் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நெடுநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் […]