• June 7, 2025

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி ஒரு நாள் லீவு எடுக்கும் போராட்டம்; அரசு அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு அறிவிப்பு

 பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி ஒரு நாள் லீவு எடுக்கும் போராட்டம்; அரசு அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு அறிவிப்பு

2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் பங்களிப்பு பென்சன் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நெடுநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்திருந்தது.

எனினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பேசியபோது தெரிவித்தார்.

இருப்பினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர் சங்கங்கள் இதற்காக போராட்டங்களையும் நடத்தியுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 22ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு அறிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *