கோவில்பட்டியில் வாகன சோதனை: புகையிலை பொருட்கள் கடத்திய 6 பேர் சிக்கினர்

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மதுபானம் விற்பனையை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், சப்- இன்ஸ் பெக்டர்கள் மாதவராஜ், நாராயணசாமி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனிப்படை போலீசார் எட்டயபுரம் ரோடு தொழில் பேட்டை அருகில் இரவு நேரத்தில் வாகன சோதனை நடத்தினா். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த தடி வீராசாமி (வயது 52) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். ல் அப்போது, மோட்டார் சைக்கிளில் 10 மது பாட்டில்கள், ஒரு மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவற்றை அவர் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள், மது பாட்டில்கள், மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இவருக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்ததாக முகமது சாலிஹாபுரதத்தை சேர்ந்த ரத்ன மாரியப்பன் ( 54) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இனாம் மணியாச்சி பைபாஸ் ரோட்டில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலங்குளம் பாலமுருகன் மகன் ஆறுமுக ராஜ் ( 24), சில்லாங் குளத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் என்ற சண்முகையா (43), கோவில்பட்டி இந்திரா நகர் அய்யம் பெருமாள் மகன் மாரியப்பன் (40), ஒட்டநத்தம் பெருமாள் மகன் கலையரசன் (28) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 8 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
