கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குறைபாடுகளை சரி செய்யக்கோரி கலெக்டரிடம் பா.ம.க.வினர் மனு .

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான விவசாயிகள், அடித்தட்டு மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் வார்டு கழிப்பறைகளில் கதவு இல்லாமல் உள்ளது.
இதனால் உள்நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு கதவுகள் அமைக்க வேண்டும். நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்குவதற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும், பிரசவ வார்டுக்கு பின்புறம் செப்டிக் டேங்க் நிரம்பி வழிகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
