நாளை வைகோ பிறந்தநாள்: கோவில்பட்டியில் 8 இடங்களில் ம.தி.மு.க. கொடியேற்று விழா

ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு நாளை (22-ந்தேதி) காலை 8:30 மணிக்கு செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் கோவில்பட்டி நகர ம.தி.மு.க. சார்பில் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் நகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் ஒரு மணி அளவில் கதிரேசன் மலை முதியோர் காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
கொடியேற்றும் இடங்கள்:
1.காந்தி மைதானம்
2.ஸ்டாலின் காலனி
3.பழனி ஆண்டவர் கோயில் ரோடு
4.கடலையூர்ரோடு.
- அரசு தலைமை மருத்துவமனை எதிரில்.
- புது ரோடு.
7.பத்மா ஆஸ்பத்திரி எதிரில்.
8.இளையரசனேந்தல் ரோடு இலக்கியா மெஸ் அருகில்
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர்
விநாயகா ஜி. ரமேஷ் . துணை செயலாளர் திரிசூலம் எம். பவுன் மாரியப்பன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் எல்.எஸ்கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.தெய்வேந்திரன் .கே கொம்பையா, மாநில விவசாய அணி துணை செயலாளர்டி.வி.சிவகுமார் ஆகியோர் கொடி ஏற்றுகிறார்கள்
