• June 4, 2025

Month: August 2022

கோவில்பட்டி

உறுப்பினர் சேர்ப்பில் ம.தி.மு.க.வினர் கவனம் செலுத்த வேண்டும்-வைகோ

கோவில்பட்டி சவுபாக்கியா மகாலில் இன்று காலை ம/தி.மு.க.தொண்டர் ராம்குமார் ரவி-லட்சுமி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.திருமண விழாவில் ம.தி.மு.க.பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், அவர் பேசுகையில், “மணமக்கள் ஒற்றுமையாக தாய், தந்தையருக்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.தனது பேச்சின் இறுதியில் வைகோ, “செப்டம்பர் 15 அண்ணா பிறந்ததினம் வருகிறது. ம.தி.மு.க/தொண்டர்கள் உறுப்பினர் சேர்ப்பு பணியில் தீவிரம் காட்டவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.திருமணவிழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில், கண்கவர் விநாயகர் சிலைகள் விற்கும் வடமாநிலத்தினர்

முழு முதல் கடவுளாக விளங்குபவர் விநாயகர். கணங்களின் தலைவனாக விளங்கும் கணபதி அவதரித்த தினம் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்தாண்டு வருகிற 31-ந்தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடக்கூடிய ஒரு சில முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. கணபதிக்கு பிடித்த கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்ட பல பதார்த்தங்களைப் படைத்து வழிபடுவது வழக்கம்.விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துவிடும். […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பரிதாபம்: தவறுதலாக ஏறிய பெட்டியில் இருந்து கீழே இறங்கிய

தென்மாவட்டங்களில் அதிக பயணிகள் வந்து செல்லும் ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு 2 பிளாட்பாரங்கள் உள்ளன. பழைய பிளாட்பாரமான முதல் பிளாட்பாரத்தில் திருநெல்வேலி மார்க்கமாக செல்லவேண்டிய ரெயில்கள் வந்து செல்கின்றன.புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது பிளாட்பாரத்தில் விருதுநகர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த பிளாட்பாரத்தில் போதுமான வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.மிக முக்கியமாக நிழற்குடைகள், பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் கிடையாது. ரெயில் வரும்போது எந்த நம்பர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகம் திறப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.194.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துஆ துறை கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.சென்னையில் நடைபெற்ற விழாவின்போதுமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் மருத்துவ கருவிகளை பயன்பாட்டிற்காக வழங்கினார். மேலும் 236 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.35 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனைக்கான […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நடுரோட்டில் சாய்ந்த மரம்; மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் முன்னாள் ராணுவத்தினர் நல உதவி மையம் மற்றும் ராணுவ வீரர்களின் நினைவிடம் உள்ளது. அதன் அருகில் சாலையோரம் வாகை மரம் இருந்தது. மரத்தை தாண்டி உரிமையியல் நீதிபதி குடியிருப்பு பகுதி உள்ளது.இந்த் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது, எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் இருந்த இந்த மரம் பகல் 12 மணி அளவில் திடீர் என சாய்ந்து விழுந்தது. நல்லவேலையாக அந்த சமயத்தில் பஸ் நிறுத்தத்தில் யாரும் இல்லை. சாலையை கடந்து […]

கோவில்பட்டி

கொலை செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் குடும்பத்தினருக்கு கீதாஜீவன் ஆறுதல்

கோவில்பட்டியை அடுத்துள்ள திட்டங் குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பொன்ராஜ் (வயது67). இவர் கடந்த 22-ம் தேதி தனது தோட்டத்தில் இருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பா.ஜனதா கட்சி நிர்வாகி மற்றும் ஒருவரை கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் வீட்டிற்கு இன்று சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த […]

செய்திகள்

ஜெயலலிதா மரணத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு அறிக்கையில் பதில்; நீதிபதி ஆறுமுகசாமி பேட்டி

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் இறுதி அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கை விரைவில் சட்டமன்றத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் முக ஸ்டாலினிடம் தாக்கல் செய்த பின் நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-154 […]

தூத்துக்குடி

தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் ரெயில் நாரைகிணறில் 1-ந்தேதி முதல் நின்று செல்லும்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கும் முன்பதிவு இல்லாத ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் மணியாச்சி அருகே உள்ள நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது.இதனால் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக வருகிற 1-ந் தேதி முதல் தூத்துக்குடி-நெல்லை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் ரெயில்கள் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.அதன்படி தூத்துக்குடியில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இலக்குமி ஆலை மெட்ரிக் பள்ளி முதல்வர் கார்த்திகேயன், அருட்சகோதரி அமலி ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்தனர், பள்ளிமுதல்வர் அருட்சகோதரி தயா முன்னிலை வகித்தார்.அறிவியல் கண்காட்சியில் உண்ணாமலை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கை காற்றோட்டம் மாறும் பொறியியல் தொடர்பான கருத்துக்களை எடுத்துரைத்தனர். பரிமளா நர்சிங் கல்லூரி மாணவர்கள் மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார்கள்.1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஏறக்குறைய 6௦௦ […]

கோவில்பட்டி

போதை பழக்கத்திலிருந்து மீண்டு வருவது எப்படி? தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு

கோவில்பட்டி நகரசபை தூய்மைக்கான மக்கள் இயக்க நிகழ்வின் ஒரு பகுதியாக, தூய்மை பணியாளர்களுக்கு போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு மற்றும் கருத்துரை வழங்கும் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகரசபை தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் நாராயணன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் கோவில்பட்டி ஆல்கஹாலிஸ் அனானிமஸ் குழுவைச் சேர்ந்த சுரேஷ், ஸ்ரீராமன் ஆஸ்கார் சுப்புராஜ் ஆகியோர் போதை மீட்பு மறுவாழ்வு பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினா்.கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை […]