• May 18, 2024

கொலை செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் குடும்பத்தினருக்கு கீதாஜீவன் ஆறுதல்

 கொலை செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் குடும்பத்தினருக்கு  கீதாஜீவன் ஆறுதல்

கோவில்பட்டியை அடுத்துள்ள திட்டங் குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பொன்ராஜ் (வயது67). இவர் கடந்த 22-ம் தேதி தனது தோட்டத்தில் இருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பா.ஜனதா கட்சி நிர்வாகி மற்றும் ஒருவரை கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் வீட்டிற்கு இன்று சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த பொன்ராஜ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பொன்ராஜ் மனைவி பொன்னுத்தாய் மற்றும் உறவினர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கீதாஜீவன் கூறினார்.
அமைச்சருடன் தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், அரசு வக்கீல் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகராஜ், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்தனம், கிளை செயலாளர்கள் தங்கராஜ், சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *