கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இலக்குமி ஆலை மெட்ரிக் பள்ளி முதல்வர் கார்த்திகேயன், அருட்சகோதரி அமலி ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்தனர், பள்ளிமுதல்வர் அருட்சகோதரி தயா முன்னிலை வகித்தார்.
அறிவியல் கண்காட்சியில் உண்ணாமலை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கை காற்றோட்டம் மாறும் பொறியியல் தொடர்பான கருத்துக்களை எடுத்துரைத்தனர். பரிமளா நர்சிங் கல்லூரி மாணவர்கள் மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார்கள்.
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஏறக்குறைய 6௦௦ மாணவ, மான்வவிகள் தங்கள் அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் இடம்பெற செய்து இருந்தனர், இந்த படைப்புகளை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டு வியந்து போனார்கள். மேலும் மாணவர்களின் திறமைகளை கண்டு பாராட்டு தெரிவித்தனர்.
