கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகம் திறப்பு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.194.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துஆ துறை கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற விழாவின்போதுமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் மருத்துவ கருவிகளை பயன்பாட்டிற்காக வழங்கினார். மேலும் 236 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் ஸ்டாலின் வழங்கினார்.
அந்த வகையில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.35 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனைக்கான ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகத்தை காணொளி காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையொட்டி கோவில்பட்டி மருத்துவமனையில் நடந்த விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் குத்துவிளக்கு ஏற்றி ஆய்வகத்தினை திறந்து வைத்தார். பின்னர் ஆய்வகத்தை சுற்றி பார்த்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் டாக்டர்கள், நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் தி.மு.க.பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.