கோவில்பட்டி அருகே உள்ள நாகம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் சிவராமச்சந்திரன் (வயது 29). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சிவராமச்சந்திரன் தனது மனைவி வசந்தகுமாரி மற்றும் 2 மகன்களுடன் கோவில்பட்டியில் உள்ள, தியேட்டரில் சினிமா பார்க்க வந்தார். சினிமா முடிந்து இரவு 10 மணி அளவில் ஊருக்கு மனைவி, மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.கரிசல்குளம் அருகே சென்றபோது 4 மர்ம நபர்கள் திடீரென்று அரிவாள், கம்புகளுடன் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். […]
கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் கீழகாலனியை சே ர்ந்தவர் சுப்பையா (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி காளியம்மாள் (70). இவர்களுக்கு கனகராஜ் (45), ஜெயக்குமார் (42) ராமநாதன் (38) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். ஜெயக்குமார், முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.கடந்த 15-ந்தேதி இரவில் ஜெயக்குமார் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு சென்று தாயார் காளியம்மாளிடம் தகராறு செய்தார். இதனை தந்தை சுப்பையா கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே […]
கோவில்பட்டி அருகே ஜமீன்தேவர்குளத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணறு தூர்வாரும் பணி நடந்தது. இந்த பணியில் திருவேங்கடம் அருகே குலசேகரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் வயது உள்பட 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் மாலை பாலகிருஷ்ணன் கிணற்றுக்குள் இறங்கி, அங்கு தோண்டிய பாறைகள், மண்ணை வெளியே தூக்கி விடும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் இருந்த கல் எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணன் மீது சரிந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். உடனே அவரை வேனில் ஏற்றி […]
கோவில்பட்டி மக்கள் நலம் அறக்கட்டளை 5-ம் ஆண்டு விழா மற்றும் நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது, விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.மக்கள் நலம் அறக்க்கட்டளை தலைவர் என்,மாரிமுத்துகுமார் வரவேற்று பேசினார்.இந்திய கலாசார நட்புறவு கழக மாநில பொதுசெயலாளர் தமிழரசன் சிறப்புரை ஆற்றினார். அறக்கட்டளை செயல்பாடுகள் பற்றி ஒருங்கிணைப்பாளர் கற்குவேல் ராஜன் விளக்கம் அளித்தார்.நன்கொடையாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி விருதுகள் வழங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை சீனிவாசன், […]
அந்த ஊரில் இருநூறு குடும்பங்கள் இருந்தன. அரசு பணியில் இருந்த பத்து குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் மாடி வீடு கட்டி குடியிருந்தார்கள்.வீட்டுமுன் கார்,மோட்டார் சைக்கிள்கள் நின்றன. வீட்டில் பெரிய அளவு டி.வி. இருந்தது. எப்போதும் டி.வி.யில் படம் அல்லது பாட்டு காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும்.அந்த வீடுகள் செல்வ செழிப்பில் இருப்பது பளிச்சென்று தெரிந்தன. மீதி உள்ள வீடுகளில் நடுத்தரவர்க்கத்தினர் வசித்து வந்தனர். அன்றாடம் விவசாய வேலைக்கு சென்று வந்தார்கள். ஏழ்மை அவர்களின் வீட்டு வாசலில் குடியிருந்தது.அங்கு சோறு பொங்குவதற்கு […]
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பாக கடைகளில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வைத்து வழங்குவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனை தவிர்ப்பது குறித்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று (18.7.22) வெளியிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை உணவு வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பற்ற […]
கபாலிக்கு அந்த தகவல் வந்ததும் ஆசை ஆட்டிப்படைத்தது.புதையல்…தங்க புதையல் அவர் மனம் அதையே நினைத்தது. காட்டுபகுதியில் உள்ள ஒற்றை ஆலமரம்…அதன் அருகில் நான்கடி ஆழத்தில் தங்க புதையல் உள்ளது என்றும் பவுர்ணமி பூஜை செய்து நரபலி கொடுத்து அந்த புதையலை எடுக்கவேண்டும் என்று மந்திரவாதி சொன்னபோது கபாலிக்கு கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருந்தது.ஆனால் மந்திரவாதி காட்டிய ஆசை கபாலியை அந்த திசையை நோக்கி நகர்த்தியது. என்னைக்கு பெரிய கோடிஸ்வரனாவது.. .புதையல் கிடைச்சா…வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்…ஆனா இந்த நரபலி கொடுக்கிற சமாச்சாரம் […]
கோவில்பட்டியை அடுத்த லிங்கம்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் கிழக்கு பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோவில்பட்டி கிராம ஊராட்சிக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் சார்பில் அடிப்படை வசதிகள் கேட்டு அளிக்கப்பட்ட மனுவில் கூறி இருந்ததாவது:-சமத்துவபுரம் கிழக்கு பகுதியில் 25 குடும்பங்களை சார்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர்,சாலை, தெரு விளக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர்இதற்கு முன்பு திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கடந்த 10.10.2019 அன்று தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு செல்லாமல் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கோவில் பகுதிக்கு காக்கி சீருடையில் சென்றார். அங்கு இருந்த சிறுமி மற்றும் அவரது காதலர் ஆகிய இருவரையும் புகைப்படம் எடுத்து பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியபடுத்திவிடுவதாக மிரட்டி பணம் ரூ 5 ஆயிரம் கொண்டு வர […]
மதுரை எம்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் வெற்றி செல்வன் (வயது 17). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, கல்லூரியில் இருந்து வெற்றி செல்வன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.பின்னர் அவர், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 30-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற வெற்றி செல்வன் திரும்பி வராமல் மாயமானார்.இதுகுறித்து அவருடைய தாயார் ராணி […]