கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் தொகுதி குளத்தூர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு குளத்தூர் ஜாலி பிரண்ட்ஸ் கபடி குழுவினர் சார்பில் 58-ஆம் ஆண்டு ஆண்கள், பெண்கள் கபடி போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். பெங்களூரு எம்.இ.ஜி., சென்னை ஐ.சி.எப்., சென்னை வருமான வரித்துறை, பேங்க் ஆப் பரோடா, சாய் சென்னை, […]
தொழில், வியாபாரம் ,கல்வி, விவசாயம், பொதுமக்கள் நலன் சிறக்க மற்றும் மழை வேண்டி 252 பால்குடம் ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.சென்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து ஆண், பெண், பக்தர்கள் 252 பேர் பால்குடம் சுமந்து ஊர்வலம் புறப்பட்டனர், சில சிறுமிகளும் ஊர்வலத்தில் பங்கேற்றனர், பால்குடம் ஊர்வலம் ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு எட்டையபுரம் ரோடு, மாதாங்கோவில் தெரு, கிருஷ்ணன்கோவில் தெரு, மார்க்கெட் ரோடு, தெற்கு பஜார் வழியாக செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு மீண்டும் வந்து […]
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் சூழ்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக ஊராட்சி பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியாக சென்று முகாம் நடத்தி தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இந்த பணி கடந்த 15-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறதுஇளையரசனேந்தல் ஆரம்ப சுகாதார மையம் சார்பில் நேற்று கோவில்பட்டி சுபா நகரில் முகாம் நடத்தப்பட்டது. இன்று புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் […]
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வான தூத்துக்குடி வடக்கு ,மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு அவரை கட்சியின் தற்காலிக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருக்கிறார்.அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கடம்பூர் ராஜு இன்று சென்னையில் இருந்து விமானம்மூலம் தூத்துக்குடி வந்தார்.விமான நிலையத்தில் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டி வந்தார். அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு […]
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அவரது வீட்டிற்குள் போலீசார் நுழைந்து கைது செய்தது மனித உரிமை மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்டி டி.ஜெயக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.பசுமை வழி சாலையில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று நேரில் சாட்சியம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-கடந்த பிப்ரவரி […]
188 நாடுகள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்க இருக்கிறது. இப்போட்டி முதன் முதலாக இந்தியாவில் தமிழகத்தில் நடைபெற உள்ளது. எனவே பெருமைமிக்க இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு சின்னம் ( Emblem) உருவாக்கி அரசு பள்ளி மாணவர்களையும் அதில் கலந்து கொள்ள ஊக்குவிகிறது.கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 700 மாணவிகளைக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் சின்னம் உருவாக்கினர். சீருடை அணிந்த மாணவிகள் ஒலிம்பியாட் சின்னம் போல் வடிவமைத்து நின்ற […]
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரத்தில் ஜே.எஸ். டபிள்யூ. எனர்ஜி லிமிடெட் பவுண்டேஷனின் சமூக பங்களிப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி லிமிடெட்டின் தூத்துக்குடி தலைமை நிர்வாகி தென்னவன் தலைமை தாங்கினார். சமூகப் பங்களிப்பு நிதி உதவி திட்ட மண்டல நிர்வாகிகள் பாரதி, சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வேலாயுதபுரத்தில் இருந்து ரெயில் நிலையம், புதுரோடு வழியாக தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலை மிகுந்த நெருக்கடியில் உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து புதுரோடு சந்திப்பு சாலையில் கனரக வாகனங்கள் திரும்புவதற்கு பெரும் சிரமப்படுகின்றன,ஏற்கனவே மின் பஸ்கள் சாலையின் நடுவே நிறுத்தி பயணிகளை ஏற்றவும், இறக்கவும் செய்கிறார்கள். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அந்த பகுதியை கடக்க முடியாமல் நீண்ட நேரம் நின்று செல்கின்றன.போக்குவரத்து போலீசார் இருந்தாலும் இந்த நிலைதான்.இதன் காரணமாக கோவில்பட்டி ஊருக்குள் கனரக […]
மகாபலிபுரத்தில் வருகிற ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் வழிகாட்டுதலின்படி நேரு யுவ கேந்திரா சார்பில் கலைக்குழு மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபடுகிறது,.முதற்கட்டமாக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் அண்ணா பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கலை விழா நிகழ்வுக்கு ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன் ராஜா, காந்திஜி கஸ்தூரிபாய் […]
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அடையார் பார்க் ஓட்டலில் ஞாயிற்றுகிழமை மாலை நடைபெற்றது.கட்சியின் இடைக்கால பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் சட்டமன்ற துணை தலைவர் மற்றும் துணை செயலாளராக கீழ்க்கண்டவர்கள், கீழ்க்காணும் பதவிகளுக்கு கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தடுக்கப்பட்டுள்ளார்கள்.துணைத்தலைவர்: ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.(திருமாங்கலம் தொகுதி)துணை செயலாளர்:அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.(போளூர் தொகுதி)மேற்கண்ட தகவலை எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார்.