பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15 ந்தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி சுபா நகரில் உள்ள ரவிள்ளா KRA மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவிகள் 7 பேர் சேர்ந்து காமராஜர் பெருமைகளை விளக்கும் வகையில் பாடி இருக்கும் பாடல் யூடியூப்பில் வெளியாகி உள்ளது. நாடு பார்த்தது உண்டா…? இந்த நாடு பார்த்தது உண்டா… என்று காமராஜரை பற்றி புகழ்ந்து பாடி இருக்கும் இந்த பாடல் இப்போது வைரல் ஆகி வருகிறது. https://youtu.be/BWmrdXbwYQY
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து பண்ணாரிக்கு செங்கல் ஏற்றி வந்த லாரி ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் விபத்தில் சிக்கியது. எதிர்பாராதவிதமாக கூத்தம்பூண்டி ஏரியில் லாரி பாய்ந்த்தது. இதில் டிரைவர் சுப்பிரமணி மட்டும் ஏரியிலிருந்து நீந்தி கரை ஏறினார்.பின்னர் சுப்பிரமணி அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் உதவியுடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. […]
ஜூலை 15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்கோவில்பட்டி ரவிள்ளா KRA சி.பி.எஸ்.இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம் மாணவ மாணவியரின் கலை நிகழ்சிகள், கல்வி வளர்ச்சி நாள் தொடர்பான போட்டிகள் நடைபெறும்.பெருந்தலைவர் காமராஜர் நமது மக்களுக்கு ஆற்றிய கல்வி தொண்டு மற்றும் சமூக பணி தொடர்பாக இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக 6-ம் வகுப்பு முதல் […]
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித் திருவிழா கடந்த 3 -ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 -ம் நாள் திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்ப தேரோட்டம் நடைபெற இருந்தது. தெப்ப தேரோட்டத்தை காண சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.விழாவையொட்டி நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி கோவில் முன்பு போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் விழுந்தது. இதனால் தீ மளமளவென எரிந்தது. […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அருள் பாலிக்கும் மகாதேவர் கோவில் பற்றியும், பிரமிக்க வைக்கும் கோவில் வரலாறு பற்றியும் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.கோவில்பட்டி தொழில் நகரம் மட்டுமின்றி கோவில் நகரமும் கூடஇங்கு பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன், பத்திரகாளி அம்மன், சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் போன்றவை உள்ளன. அந்த பட்டியலில் மகாதேவர் கோவில் இடம் பெற்றுள்ளது,இந்த கோவில் கோவில்பட்டியில் இருந்து 9.2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிராமத்து சூழலில் கேரள கட்டிடக்கலை சிறப்பை எடுத்துக்காட்டும் […]
தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே உள்ள கிராமமான செட்டிமல்லன்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (வயது 32). லாரி டிரைவர். இவரது மனைவி கற்பகவல்லி (27). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.காலப்போக்கில் வேல்முருகன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.இந்நிலையில் இன்று காலை வேல்முருகன், மனைவியை சராமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ […]
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் மோதல் முற்றுகிறது: அ.தி.மு.க. வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தார்.இந்நிலையில், அ.தி.மு.க.வின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் . அ.தி.மு.க.வின் வங்கி வரவு செலவுகளை பராமரிப்பது, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம் ஆகியவற்றை வைத்திருந்தார். […]
டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது.இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பிரச்சினைகள் தீரும் என்ற எதிர்பாப்பும் நிறைவேறவில்லை என்பதால் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் வழிகாட்டுதல் பேரில் வருகிற 28-ந்தேதி கடலூரில் ஆயத்த மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,.இதையொட்டி கோவில்பட்டியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை […]
கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்ளின் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் ரவி மாணிக்கம், முகாமை தொடக்கி வைத்தார்.டாக்டர் ராஜேஸ்வரி முகாமில் கலந்து கொண்ட 80 பேருக்கு கண் பரிசோதனை செய்தார். இவர்களில் 3௦ பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்க தலைவர் செண்பகம் […]
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராணி மகராஜபுரத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் சரவணகுமார் (வயது 40), இவர் நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளராக உள்ளார்.இன்று காலை குரும்பூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அம்மன்புரம் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் அவரை சராமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர் இதில்பலத்த காயம் அடைந்த சரவணகுமார் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்இதுகுறித்து தகவல் அறிந்து திருச்செந்தூர் […]