நாடார் மக்கள் இயக்க மாநில செயலாளர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராணி மகராஜபுரத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் சரவணகுமார் (வயது 40), இவர் நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளராக உள்ளார்.
இன்று காலை குரும்பூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அம்மன்புரம் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் அவரை சராமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர் இதில்பலத்த காயம் அடைந்த சரவணகுமார் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்
இதுகுறித்து தகவல் அறிந்து திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஆவுடையப்பன், குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணகுமார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட சரவணகுமாருக்கு நிர்மலா தேவி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். நிர்மலா தேவி ஆறுமுநேரி பேரூராட்சியில் 14வது வார்டு உறுப்பினராக உள்ளார்.
சரவணகுமாரின் தம்பி வேல்குமார் கடந்த 2019ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‘
கொலை எதிரொலியாக அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
