கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்ளின் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் ரவி மாணிக்கம், முகாமை தொடக்கி வைத்தார்.
டாக்டர் ராஜேஸ்வரி முகாமில் கலந்து கொண்ட 80 பேருக்கு கண் பரிசோதனை செய்தார். இவர்களில் 3௦ பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்
நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்க தலைவர் செண்பகம் , பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை நிறுவனர் காளிதாஸ், விவசாயிகள் சங்க செயலாலர் ஆவல்நத்தம் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
