டாஸ்மாக் பணியாளர்கள் போராட்ட ஆயத்த மாநாடு; கோவில்பட்டியில் ஆலோசனை

டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பிரச்சினைகள் தீரும் என்ற எதிர்பாப்பும் நிறைவேறவில்லை என்பதால் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் வழிகாட்டுதல் பேரில் வருகிற 28-ந்தேதி கடலூரில் ஆயத்த மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,.
இதையொட்டி கோவில்பட்டியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
அரசு பனியாளர் சங்க முன்னாள் பொதுசெயலாளர் கணேசன், நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் மரகதலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.
