ஏரிக்குள் பாய்ந்த லாரி; 3 பேர் உயிர் தப்பினர்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து பண்ணாரிக்கு செங்கல் ஏற்றி வந்த லாரி ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் விபத்தில் சிக்கியது. எதிர்பாராதவிதமாக கூத்தம்பூண்டி ஏரியில் லாரி பாய்ந்த்தது. இதில் டிரைவர் சுப்பிரமணி மட்டும் ஏரியிலிருந்து நீந்தி கரை ஏறினார்.
பின்னர் சுப்பிரமணி அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் உதவியுடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. ஆனால் ஏரியில் லாரிக்குள் சிக்கி இருந்த செங்கல் சூலைத் தொழிலாளர்களை அவர்களால் மீட்க முடியவில்லை.
பின்னர், அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் படகோட்டிகள் உதவியுடன் எரிக்குள் இறங்கி தொழிலாளர்களான மணி மற்றும் ஜானகி இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளனர்.
