கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க மறுப்பதை கண்டித்தும், இந்த திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு […]
கோழி இறைச்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால், அதை ஆரோக்கியமான முறையில் எப்படி சமைக்க வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோழியின் ஒவ்வொரு பாகங்களிலும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை வெவ்வேறு அளவுகளில் உள்ளன. கோழியின் மார்பகத்தில் உள்ள இறைச்சியில் 28 கிராமுக்கு 1 கிராம் கொழுப்பு தான் உள்ளது. அதேபோல கோழியின் கால்களில் ஒவ்வொரு 28 கிராமுக்கும் 2 கிராம் கொழுப்பு உள்ளது. கோழியை சமைக்க முடிவு செய்வதற்கு முன், யாருக்கு […]
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இளநிலை மற்றும் முதுநிலை என 2 பிரிவுகளில் 38,114 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், துறைசார்ந்த சர்வே திட்டங்களை செயல்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்றுவார்கள். […]
திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த ராஜூ என்பவரது மகன் ஆண்டிச்சாமி (வயது 24).இவர் கடந்த 2018ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணுக்கு திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திசென்று பாலியல் தொல்லை செய்ததாக கைதானார்.வடமதுரை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா போக்சோ சட்டத்தின் கீழ் ஆண்டிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தார். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். ஆண்டிச்சாமிக்கு 13 […]
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். ரசிகர்களின் எதிர்பார்ப்பினை ‘விக்ரம்’ படம் முழுவதுமாக பூர்த்தி செய்துள்ளது.இந்த படத்தில் கமல்ஹாசன் எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அனிருத் இசையில் வெளியான இந்தப்பாடலை அண்மையில் பார்வைத்திறன் இல்லாத மாற்றுத் திறனாளி திருமூர்த்தி பாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதை தொடர்ந்து திருமூர்த்தியை நேரில் அழைத்து கமல் பாராட்டினார். மேலும் […]
ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அந்தந்த ஊர்களை சார்ந்த பாரம்பரியமிக்க உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்காக ரெயில்வே நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி கோவில்பட்டி ரெயில் நிலையத்தின் சார்பில், புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விற்பனை நிலையத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். கோவில்பட்டி கொண்டல்சாமி, விருதுநகர் வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், கோவில்பட்டி ரெயில் நிலைய அதிகாரி மகாராஜ்சிங் மீனா, ரெயில்வே பாதுகாப்பு படை […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தி.மு.கழக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக “திராவிட மாடல்பயிற்சி பாசறைக் கூட்டங்கள்” நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மகளிரணி மற்றும் மாணவரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை […]
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே உள்ள மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். 2-வது தடவையாக இவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.ஊராட்சி தலைவர் ரமேஷ் மகள் ஷாலினி- கைலாஷ் திருமண விழா கும்பகோணத்தில் இன்று (ஜூன் 24)நடைபெற்றது. இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சடித்த ரமேஷ், அதில் ஊர் மக்களின் பெயர்களையும், உறவினர்களின் பெயர் போல் அச்சடித்து அனைவருக்கும் வழங்கியது ஆச்சியத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்லபுரம் ஊராட்சியில் மல்லபுரம், கச்சுகட்டு, திருமலைராஜபுரம், கீழ திருமலைராஜபுரம், […]
இந்திய ராணுவத்தில் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.ராணுவத்தில் 4 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற, 171/2 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.இதன்படி, விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள், இன்று முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு விமானப்படை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும், ஜூலை […]
ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நேரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாக எதிரொலித்தது இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்திரநாத் ஆகியோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றனர்.முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” பா.ஜ.க. கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு வெள்ளிக்கிழமை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்வுக்கு வருமாறு பா.ஜ.க. […]