• June 7, 2025

ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்

 ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்

ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நேரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாக எதிரொலித்தது
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்திரநாத் ஆகியோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” பா.ஜ.க. கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு வெள்ளிக்கிழமை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்வுக்கு வருமாறு பா.ஜ.க. அழைப்பு விடுத்தது. அதனால் டெல்லி செல்கிறேன்”என்று தெரிவித்தார்.
ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு செல்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *