• May 17, 2024

Month: June 2022

கோவில்பட்டி

கோவில் விழாவில் அன்னதானம்

கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் கோவில் 58 ஆம் ஆண்டு கொடை விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.இதையொட்டி இன்று அன்னதான திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், 24-வது வார்டு அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி தலைமையில், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அன்னதானத்தை தொடங்கி வைத்தார இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அம்மா […]

செய்திகள்

கூடுதல் லக்கேஜ்களுக்கு ரெயில்களில் கட்டணம்; மீறினால் அபராதம்

ரெயிலில் பயணம் செய்யும்போது இனி கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகளை இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.இந்தப் புதிய விதிகளின்படி, பயணிகள் ரெயில் வகுப்புகளைப் பொறுத்து 35 முதல் 70 கிலோ வரை லக்கேஜை இலவசமாக கொண்டுசெல்லலாம். அதன்படி, ஏ.சி. முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் 70 கிலோ வரை லக்கேஜையும் ஏ.சி. இரண்டாம் வகுப்பில் பயணிப்பவர்கள் 50 கிலோ வரை லக்கேஜையும் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.ஏ.சி. […]

தூத்துக்குடி

மாநில சிலம்ப போட்டி: பரிசுகள் வென்ற மாணவ மாணவிகள் 16 பேருக்கு பாராட்டு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.இந்த சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள அப்துல்கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்ற 16 மாணவ மாணவியர்கள் இன்று (3.6.2022) மாவட்ட […]

செய்திகள்

‘தினத்தந்தி’ ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும். அதன்படி, ‘கலைஞர் எழுதுகோல் விருது’ க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.திருச்சிராப்பள்ளி […]

கோவில்பட்டி

உலக கராத்தே ; தங்கப்பதக்கம் வென்ற ஓட்டப்பிடாரம் மகேசுக்கு பாராட்டு

உலக கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: ஓட்டப்பிடாரம் மகேசுக்கு பாராட்டுமலேசியாவில் நடைபெற்ற 6 வயதுக்கு மேற்பட்டோருக்கான 18வது உலக கராத்தே போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இவர்கள் 21 பிரிவுகளில் போட்டியிட்டு 12 தங்க பதக்கங்களையும், தலா 5 வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்று அசத்தினர். இந்தநிலையில் தமிழகம் திரும்பிய அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மாணவ, மாணவியர் கராத்தே போட்டியில் சாதித்தது குறித்து மகிழ்ச்சி […]

கோவில்பட்டி

கோவில் விழாவில் டியூப் லைட்டுகளை உடைத்து தகராறு செய்த 3 பேர் கைது

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள கோவிலில் கொடை விழா நடைபெற்றது. அப்போது அங்கு வந்த கோவில்பட்டி வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் சமுத்திரவேல் மகன் வெங்கடேஷ் (21), கருப்பசாமி மகன் மாரிகண்ணன் (21) , சோலையப்பன் மகன் முத்துகுமார் (20) ஆகிய 3 பேரும் கோவில் திருவிழாவிற்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர்.இதனையடுத்து கோவில் தர்மகத்தா இசக்கிமுத்து (37), அவர்களை சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் இசக்கிமுத்துவிடம் தகராறு செய்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கவேண்டும்; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ், கோவில்பட்டி பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் கல்லூரி கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் 9 துறைகளும், முதுகலை பாடப்பிரிவுகள் 5 துறைகளும் உள்ளன. கோவில்பட்டி, கயத்தார், கழுகுமலை மற்றும் எட்டையபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1800 […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சைக்கிள் தினம் பேரணியில் கலெக்டர் பங்கேற்பு

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சைக்கிள் பேரணி இன்று காலை நடைபெற்றது.இப்பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் கலெக்டர் செந்தில்ராஜ்,மேயர் ஜெகன் பெரியசாமி, பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுநல தொண்டு நிறுவனங்கள், சைக்கிள் ஓட்டும் சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள், பல்வேறு நிலையிலான பெரு வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ் சாலையில் அமைந்துள்ள […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி 99-வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு உள்ள கருணாநிதி சிலைக்கு மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.பின்னர் பழைய பஸ் நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அரசு மருத்துமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்கள்நிகழ்ச்சிகளில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் […]

செய்திகள்

99-வது பிறந்தநாள்: கருணாநிதியின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன்.3-ந்தேதி (இன்று) அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச்சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை […]