கொலைவழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு ஆல்பர்ட் அன் கோ ஜங்ஷன் பகுதியில் எஸ்.எஸ் மூர்த்தி தெருவை சேர்ந்த பிரபு (வயது 41) என்பவர் கடந்த 6.5.2022 அன்று அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
முன்விரோதம் காரணமாக மேல சண்முக புரத்தைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் சூப்பி (எ) செல்வசதீஷ் (23), வண்ணார் தெருவை சேர்ந்த சரவணன் மகன் ஜெயக்குமார் (எ) எலும்பு அருண் (19), தாமோதர நகரை சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (எ) சொரி (21), சத்யா நகரை சேர்ந்த கண்ணன் மகன் சீனு (22) மற்றும் மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த இருதயராஜ் மகன் மரிய அந்தோணி சாம் (19) ஆகிய 5 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார். இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 24 பேர் உட்பட 106 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
