பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சிறப்பு பணி பதக்கம்
2021ம் ஆண்டிற்கான காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு அலுவலராக பணியாற்றி வரும் கன்னியாகுமரி மாவட்டம் குற்ற பிரிவு குற்ற புலனாய்வு துறை (சி.பி.சி.ஐ.டி.) இன்ஸ்பெக்டர் சாந்திக்கு 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் காவல் புலன்விசாரணை சிறப்பு பணி பதக்கத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்
சிறப்புப்பணி பதக்கம் பெற்ற இன்ஸ்பெக்டர் சாந்தி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது இன்ஸ்பெக்டர் சாந்தி இது போன்று மென்மேலும் பதக்கங்கள் பெற்று சிறப்பாக பணியாற்றுமாறு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வாழ்த்தி பாராட்டினார்.
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சிறப்பு பணி பதக்கம்
2021ம் ஆண்டிற்கான காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு அலுவலராக பணியாற்றி வரும் கன்னியாகுமரி மாவட்டம் குற்ற பிரிவு குற்ற புலனாய்வு துறை (சி.பி.சி.ஐ.டி.) இன்ஸ்பெக்டர் சாந்திக்கு 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் காவல் புலன்விசாரணை சிறப்பு பணி பதக்கத்தை முதல்-அமச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
சிறப்புப்பணி பதக்கம் பெற்ற இன்ஸ்பெக்டர் சாந்தி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது இன்ஸ்பெக்டர் சாந்தி இது போன்று மென்மேலும் பதக்கங்கள் பெற்று சிறப்பாக பணியாற்றுமாறு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வாழ்த்தி பாராட்டினார்.