• June 7, 2025

Month: June 2022

கோவில்பட்டி

கோவில்பட்டி கோவிலில் கால்நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீராம் நகர் 4வது தெருவில் ( குறிஞ்சி நகர்) அருள்பாலிக்கும் முப்பிடாதி அம்மன், கருப்பசாமி திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு விநாயகர், முப்பிடாதி அம்மன், கருப்பசாமிக்கு மஞ்சள், பால், சந்தனம் முதலான 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.தொடர்ந்து நாட்காலுக்கு சிறப்பு பூஜை செய்து நடப்பட்டது. பூஜைகளை வீரவாஞ்சிநகர் சங்கரேஸ்வரி கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலர் அகற்றம்; தூத்துக்குடி டாக்டர்கள் சாதனை

தூத்துக்குடியை சேர்ந்த 4 வயது குழந்தை இன்று காலை 8 மணியளவில் கழுத்துச் சங்கிலியில் இருந்த உலோக டாலரை தவறுதலாக விழுங்கிவிட்டது. அந்த டாலர் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டதுடன் மூச்சு விடுவதிலும் கஷ்டம் உண்டானது. இதனால் அந்த குழந்தையை பெற்றோர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவா வந்தனர். எக்ஸ்ரே பரிசோதனையில், மேல் உணவுக்குழாய் மட்டத்தில் தொண்டையில் வைர வடிவ உலோக டாலர் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு அறிவுறுத்தலின் […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் கடலில் பக்தர் தொலைத்த 10 பவுன் தங்கச் சங்கிலி; 8 மணிநேரத்தில்

திருப்பூரைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த், கடலில் புனித நீராடினார். கடலில் குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது தன் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதை உணர்ந்தார். உடனடியாக அங்குமிங்கும் தேடிபார்த்தார். அனால் கண்களில் தென்படவில்லை.தங்கச் சங்கிலி கிடைக்காமல் போனதையடுத்து, மன வருத்தத்துடன் முருகப் பெருமானை தரிசனம் செய்யச் சென்றார். கோவிலில் காசி விஸ்வநாதன் […]

செய்திகள்

அரசு பள்ளிகளில், இனிமேல் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் கிடையாது

தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் எல்.கே.ஜி. , யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி. , யூ.கே.ஜி. வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது. எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.=இதற்கு மாற்றாக மீண்டும் சமூக நலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடக்க […]

செய்திகள்

பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக செவிலியர்கள் போராட்டம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள், தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை திடீர் போராட்டம் நடத்தினர்.சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். தமிழகத்தில் மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015-ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக ஏறக்குறைய 5,000-க்கும் அதிகமான செவிலியர்கள் தற்காலிக பணிநியமனம் செய்யப்பட்டனரஅவர்களில் 2,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கடந்த ஆண்டு மே […]

செய்திகள்

`தூய்மை நகரம்’ விழிப்புணர்வு போட்டிகள்

தமிழக அரசின் வழிகாட்டலின் படி, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக “எனது குப்பைகள், எனது பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மந்திரி தலைமையில் மாணவ-மாணவியருக்கு, ஓவியம் வரைதல், சுவரொட்டி தயாரித்தல் மற்றும் வாசகம் எழுதுதல் ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, […]

செய்திகள்

துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

மறைந்த இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா மகன் நவுஷாத் அலி துபாய் சென்றார். அவருக்கு அங்குள்ள பொன்னுசாமி உணவகத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மதுமஹ்ரூப் தலைமை தாங்கினார். அவர் நவுஷாத் அலிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். ஈரோடு கு. ஜமால் முஹம்மது எழுதிய தியாகச்சுடர் திப்பு சுல்தான்என்ற நூலும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. கல்லிடைக்குறிச்சி சமூக ஆர்வலர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நாகூர் இ.எம். ஹனிபாவின் சமூக நல்லிணக்கப் […]

கோவில்பட்டி

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் நிறுவன கிளைகள் உள்ளன. அனைத்து கிளைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் இந்த் சோதனை நடந்து வருகிறது, 25 கிளைகளுக்கும் தனித்தனி குழுவினர் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.கோவில்பட்டியில் பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி ஸ்கேன், கதிரேசன் கோவில் தெருவில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவன உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி

குடும்பத்துடன் விஷம் குடித்தார்: மனைவியை தொடர்ந்து கணவரும் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது 6௦). இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மா பட்டியில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உமாகோமதி(52). இவர்களது மகன் சிவபிரபாகரன்(28) என்ஜினீயரிங் பட்டதாரி. முத்துராமலிங்கம் தனது குடும்பத்துடன் ஒட்டன்சத்திரத்தில் வசித்து வந்தார்.கடந்த ஏப்ரல் மாதம் முத்துராமலிங்கம் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு டயாலிசிஸ் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த […]

தூத்துக்குடி

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை புதுப்பிப்பு; மாற்றுதிறனாளிகள் நீராட சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை ரூ.4.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், வந்து செல்ல கேளரி போன்ற இருக்கைகள், அழகிய முத்துபோன்ற சிலைகள், செல்பி பிரியர்களை கவர்வதற்காக ஐ லவ் டூடி என்ற எழுத்து கொண்ட கண்களை கவரும் அழகான விளக்குகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள், ஊஞ்சல் மற்றும் மாற்றுதிறனாளிகள் சருக்கு மூலம் வீல் சேரில் சென்று கடலில் நீராடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இந்த அழகிய பூங்காக் திறப்பு விழா நடைபெற்றது. இதனை […]