• June 8, 2025

`தூய்மை நகரம்’ விழிப்புணர்வு போட்டிகள்

 `தூய்மை நகரம்’ விழிப்புணர்வு போட்டிகள்

தமிழக அரசின் வழிகாட்டலின் படி, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக “எனது குப்பைகள், எனது பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.
கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மந்திரி தலைமையில் மாணவ-மாணவியருக்கு, ஓவியம் வரைதல், சுவரொட்டி தயாரித்தல் மற்றும் வாசகம் எழுதுதல் ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முஹம்மது, சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *