துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

மறைந்த இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா மகன் நவுஷாத் அலி துபாய் சென்றார். அவருக்கு அங்குள்ள பொன்னுசாமி உணவகத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது
மஹ்ரூப் தலைமை தாங்கினார். அவர் நவுஷாத் அலிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். ஈரோடு கு. ஜமால் முஹம்மது எழுதிய தியாகச்சுடர் திப்பு சுல்தான்
என்ற நூலும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி சமூக ஆர்வலர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நாகூர் இ.எம். ஹனிபாவின் சமூக நல்லிணக்கப் பாடல்கள் குறித்த நினைவுகளை பகிர்ந்தார்.
சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத், இளையான்குடி அபுதாஹிர்,
இலங்கை செம்மொழி எப்.எம். பிரதிநிதி மவுலவி சுபையிர் அஹில் முஹம்மத்,
நாகூர் ஜாபர், இப்ராஹிம், மதுரை சதீஷ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
