• June 7, 2025

கோவில்பட்டி கோவிலில் கால்நாட்டு விழா

 கோவில்பட்டி கோவிலில் கால்நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீராம் நகர் 4வது தெருவில் ( குறிஞ்சி நகர்) அருள்பாலிக்கும் முப்பிடாதி அம்மன், கருப்பசாமி திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு விநாயகர், முப்பிடாதி அம்மன், கருப்பசாமிக்கு மஞ்சள், பால், சந்தனம் முதலான 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.
தொடர்ந்து நாட்காலுக்கு சிறப்பு பூஜை செய்து நடப்பட்டது. பூஜைகளை வீரவாஞ்சிநகர் சங்கரேஸ்வரி கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *