தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் அமைச்சர் பி.கீதாஜீவன், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழு தலைவர் கனிமொழி எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு மழையின் போதும் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்து பொது மக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை […]
லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.கடல் மட்டத்திலிருந்து 16 அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையத்தில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு […]
தூத்துக்குடியில் ரோச் பூங்காவில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் நகரின் மையப்பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பரதர் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு சமூக அமைப்பினருடனான கலந்தாலோசனை கூட்டம் ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-தூத்துக்குடி ரோச் […]
தூத்துக்குடி மக்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.அந்த அறிக்கை நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அப்போதைய கலெக்டர் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் […]
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிதிருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுபணிகளைமாவட்டஆட்சியர் செந்தில்ராஜ், இன்று நேரில் ஆய்வுமேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிதிருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா 25.10.2022 முதல் 31.10.2022 வரை நடைபெறஉள்ளது. 30.10.2022 அன்று சூரசம்ஹாரம் மற்றும் 31.10.2022 அன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாமுழுவதும் இருந்துகந்த சஷ்டி திருவிழாவிற்குசுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்துகொள்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாமுன்னேற்பாடுபணிகள் தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் கடந்தவாரம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இன்றையதினம் பக்தர்களுக்குசெய்யப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்துஆய்வுசெய்யப்பட்டது. […]
தூத்துக்குடி மறைமாவட்டம் பாத்திமாநகர் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலயத்தில் 64 ம் ஆண்டு மகோன்னத பெருவிழாவை முன்னிட்டு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெம்ஜியூஸ் தலைமையில் கூட்டுத்திருமண திருப்பலி நடைபெற்றது.ஒரே மேடையில் அகஸ்டின்- சுபர்னா, சில்வஸ்டர் -சூர்யா, பிராங்கோ- கிராஸ்வின், ஆகிய 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 26 கிராம் தங்கத்தாலி, கட்டில், பீரோ, வாஷிங் மிஷின் பிரிட்ஜ் என சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.அதன் பின்னர் […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குக்குட்பட்ட புதுக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தலைமை ,மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர் அஆகியோர் தலைமை தாங்கினார்கள்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தும் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட […]
தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 3 ம் கேட் ரெயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டிருந்த பழுதை சரி செய்ய சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.இதன் காரணமாக கடந்த 12 நாட்களாக பாலம் மூடப்பட்டு போக்குவரத்து, 4வது ரயில்வே கேட் மற்றும் 2ம் கேட் வழியாக மாற்றி விடப்பட்டது. பிரதான சாலை மூடப்பட்டதால் நகரில் பல பகுதிகள் போக்குவரத்து நெருக்கடியில் தவித்தன. நீண்ட தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. […]
தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு உரங்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திரேஸ்புரம் கடற்கரை வேனில் இருந்து படகிற்கு மூட்டைகள் ஏற்றப்பட்டு கொண்டு இருந்தது.போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 50 உர மூட்டைகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 […]
தூத்துக்குடி புது பஸ் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் இன்று பார்வையிட்டார். அவருடன் அதிகாரிகள் சென்று இருந்தனர்.2010-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக பள்ளி விடுமுறை நாட்களில் வேலை செய்வது என முடிவு செய்து அப்பணிகள் நடைபெற்று வந்தன.11-ந்தேதி பணிகள் முடிந்து திறக்கப்படும் என்று அறிவிக்க்ப்பட்டிருந்த நிலையில் மேலும் சில நாட்கள் பணி நீட்டித்து தற்போது முடியும் தருவாயில் உள்ளது.இன்று (புதன்கிழமை) […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
