• June 7, 2025

காவலர் வீர வணக்க நாள்: துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

 காவலர் வீர வணக்க நாள்: துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து 16 அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையத்தில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது

காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் உதவி ஆய்வாளர் நங்கையர்மூர்த்தி தலைமையில் ஆயுதப்படை போலீசார் 60 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் சத்தியராஜ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், மணியாச்சி லோகேஷ்வரன், ஸ்ரீவைகுண்டம் மாயவன், கோவில்பட்டி வெங்கடேஷ், மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிவசுப்பு, காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு பேச்சிமுத்து, ஆயுதப்படை சுடலைமுத்து, தென்பாகம் ராஜாராம், வடபாகம் ரபி சுஜின் ஜோஸ், அனைத்து மகளிர் காவல் நிலையம் வனிதா, போக்குவரத்து பிரிவு மயிலேறும்பெருமாள், உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *