தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.10 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு உரங்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திரேஸ்புரம் கடற்கரை வேனில் இருந்து படகிற்கு மூட்டைகள் ஏற்றப்பட்டு கொண்டு இருந்தது.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 50 உர மூட்டைகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதைத் தொடர்ந்து கடத்தப்பட இருந்த உரம் அதற்கு பயன்படுத்திய படகு, வேன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் உரத்தினை இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடிக்கு கப்பல் மூலமாக துறைமுகம் வரும் சரக்குகள் துறைமுகத்தில் இருந்து குடோன்களுக்கு செல்லும் வழியில் டன் கணக்கில் லாரிகள் மூலம் திருடப்பட்டு, கோடி கணக்கில் வெளிசந்தையில் விற்று சம்பாதிக்கும் வேலையில் சில ஷிப்பிங் நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் சிலர் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், அரசிற்கு வருவாய் இழப்பு, மோசடி செயல், துறைமுகம் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் செயல் போன்றவற்றில் ஈடுபடும் கும்பல்கள் மீது மத்திய பொருளாதார குற்ற புலனாய்வு துறை மற்றும் மத்திய பாதுகாப்பு துறை உடனடியான தீவிர விசாரனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
