திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா: பக்தர்கள் தங்க 12 இடங்களில் தற்காலிக விடுதிகள்; ஆட்சியர் தகவல்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிதிருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுபணிகளைமாவட்டஆட்சியர் செந்தில்ராஜ், இன்று நேரில் ஆய்வுமேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிதிருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா 25.10.2022 முதல் 31.10.2022 வரை நடைபெறஉள்ளது. 30.10.2022 அன்று சூரசம்ஹாரம் மற்றும் 31.10.2022 அன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாமுழுவதும் இருந்துகந்த சஷ்டி திருவிழாவிற்குசுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்துகொள்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாமுன்னேற்பாடுபணிகள் தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் கடந்தவாரம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்றையதினம் பக்தர்களுக்குசெய்யப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்துஆய்வுசெய்யப்பட்டது. குறிப்பாகபக்தர்கள் தங்குவதற்குவசதியாக 12 இடங்களில் 70,000 சதுரஅடிபரப்பளவில் தற்காலிக தங்கும் விடுதிகள் அமைக்கப்படுகிறது. திருக்கோயில் வளாகத்தில் 350 கழிப்பறைகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் மேலும் 100 தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுவருகின்றன.

ஒப்பந்ததாரர்கள் மூலம் தற்காலிக தங்கும் விடுதிகள் அமைக்கப்படுவதை பொதுப்பணித்துறையினர் மூலம் கண்காணித்து உறுதித்தன்மைக்கான சான்றிதழ் வழங்கப்படும். காவல் துறை மூலம் 2729 காவலர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடவுள்ளார்கள். மேலும் ஊர்க்காவல் படையினர் 300 பேர்; பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
திருக்கோவிலில் உள்ள 275 தூய்மைபணியாளர்கள்,திருவிழாவிற்காக கூடுதலாக நியமிக்கப்பட்ட 175 தூய்மைபணியாளர்கள் மற்றும் நகராட்சி மூலம் 80 தூய்மைபணியாளர்கள் ஆகியோர் சுழற்சிமுறையில் தூய்மைபணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தீயணைப்புதுறையினர் தயார் நிலையில் உள்ளனர்.’
திருக்கோயில் வளாகத்தில் 4 இடங்களில் மருத்துவமுகாம்கள் அமைக்கப்படுகிறது. மேலும் 3 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் அருகில் 800 கார்கள் நிறுத்தும் அளவுக்கு இடம் தயாராகஉள்ளது. அதுபோல் ஊருக்குவெளியேயும் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுவருகிறது.
சூரசம்ஹாரம் நடைபெறும் அன்றுகடற்கரையை தூய்மை செய்வதற்கு சென்னையில் இருந்து ஒரு இயந்திரம் நாளைகொண்டுவரப்படும். வேளாண் பொறியியல் துறை மூலம் கடற்கரையை சமப்படுத்தும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. திருவிழாவிற்காகபல்வேறுவழித்தடங்களில் 350 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை,கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் இருந்து அதிகபக்தர்கள் வருவதால் கூடுதலாக ரெயில்கள் இயக்கிட ரெயில்வே நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 80 சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் திருக்கோயில் வளாகம் முழுவதும் 50 கேமராக்கள் பொருத்தப்படும். அதேபோல் 3 ட்ரோன் கேமராக்கள் மூலம் கடற்கரைமுழுவதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி திருவிழாவிற்குவரும் பக்தர்கள் விரைவாக சுவாமிதரிசனம் செய்வதற்கு தேவையானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
இவ்வாறு ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்தார்.
கோயில்இணைஆணையர் (பொ) அன்புமணி, வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, துணைகாவல் கண்காணிப்பாளர் ஆவுடையப்பன், சுகாதாரபணிகள் துணை இயக்குநர் மரு.பொற்செல்வன் மற்றும் பலர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.
